கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக, கடந்த 1993 ஆண்டு முதல் இந்தியாவில் தென் பகுதியான தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தில் கர்த்தருடைய பெரிதான ஊழியத்தை செய்ய கர்த்தர் உதவி செய்கிறார். ஆண்டிபட்டியை சார்ந்த ஜக்கம்பட்டி, புரம், பாப்பம்மாள்புரம், ஸ்ரீனிவாசநகர் மற்றும் கொண்டம்மநாயக்கன்பட்டி பகுதிகளை எங்களின் இலக்காக கொண்டு ஊழியம் செய்து வருகிறோம். எண்களின் ஊழிய தரிசனம் "கர்த்தரை அறியாத பகுதிகளுக்கு அவரை எடுத்து செல்வது மட்டுமே". கர்த்தர் அற்புதமாக அவரின் சபையை என்னைக்கொண்டு நடத்தி வருகின்றார். முழுவதும் பாரம்பரிய கட்டுக்களாலும் ஜாதி பிடியாலும் மக்கள் கட்டப்பட்டு இருக்கும் இந்த பகுதியுள்ளும் கர்த்தர் எங்களுக்கு முத்தான 50 ஆத்துமாக்களை தந்துள்ளார். கடினமான பாதைகளிலும் துக்கமான நேரங்களிலும் கர்த்தர் ஒருவரே எங்களுக்கு துணையும் ஆருதலுமாய் இருந்து நடத்தி வருகின்றார். வீடுகள் தோறும் வீட்டு சபைகளும் ஜெபக்குழுக்களும் அமைத்து நற்செய்தியை மக்களுக்கு சொல்லி வருகிறோம். கர்த்தர் தந்த தரிசனத்தின் மூலம் 2020ம் ஆண்டுக்குள் 150 ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதே எங்களின் தற்போதைய லட்சியம். எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்,
போதகர் சாலமோன் செல்வராஜ்.
தமிழகத்தில் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி தாலுகாவில் மணியக்காரன்பட்டி, ஜக்கம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி மற்றும் அணைக்கரைபட்டி ஆகிய பகுதிகளில் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி ஆண்டிப்பட்டியை மையமாக வைத்து எங்கள் விசுவாச ஜெபவீடு செயல்படுகிறது. திருச்சபையை கர்த்தருடைய அன்பு ஊழியர் ஐயா திரு.சாலமோன் செல்வராஜ் அவர்கள் தேவ கிருபையால் வல்லமையாக நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி பகுதி ஆவிக்குரிய வளர்ச்சியில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி. இயேசு கிறிஸ்து ஒரு மதத்தலைவர் என்றும், அவர் கடவுள்களில் ஒருவர் என்று நினைக்கும் அநேக ஜனங்கள் இன்றும் வாழ்கிறார்கள்.
சமாதானமில்லாமல் தற்கொலைக்கு நேராக செல்லும் ஜனங்கள், விக்கிரக ஆராதனை செய்து, பகுதிக்கு ஒரு தெய்வமும், ஜாதிக்கு பல தெய்வங்களும், வீட்டுக்கு வீடு குலதெய்வங்களும் வைத்து இவை நமக்கு சமாதானம் தராதா என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இயேசு வெள்ளைக்காரர்களின் தெய்வம். அதை நாம் வணங்க கூடாது என்ற சமுதாய கட்டு போன்ற குறுகிய வட்டத்தில் வாழ்கிறார்கள்.
விபசாரங்களும், வேசிதனங்களும், போதைப்பொருட்களும் மக்களை அடிமை படுத்தி வைத்துள்ளது. மக்கள் தாங்கள் கேட்டதும் அன்றி அடுத்தவர்களையும் கெடுத்து கொண்டு இருக்கும் ஜனங்கள் மத்தியில் இயேசு கிறிஸ்து தான் ஆண்டவர் என்று அறிவித்து ஆத்துமா ஆதாயப் பணியில் எங்கள் திருச்சபையின் ஊழியம் நடைபெறுகின்றது. இந்த ஊழியம் பிற மத எதிர்ப்புக்களையும், பொருளாதாரத் தேவைகளையும் தாண்டி தேவனுடைய வல்லமையுள்ள கிருபையால் தொடர்ந்து நடைபெறுகின்றது.
இளைஞர்களுக்கு ஆத்துமா ஆதாயப் பயிற்சி அளிக்கப்பட்டு அருகிலுள்ள கிராமங்களில் சுவிசேஷ ஊழியம் செய்து வருகிறார்கள். சிறுவர் ஊழியத்தில் வசனம் ஒப்புவித்தல் பயிற்சி மூலம் குழந்தைகளின் வேத ஞானம் வளர உதவுகின்றது. வீட்டு சபை கூட்டங்கள் விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடைய செய்கிறது.
இவ்விதமாய் தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிற எங்கள் திருச்சபைக்காக அனுதினமும் உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்.
தேவ பணியில்,
விசுவாசம் சுப்புராஜ். கன்னியப்பபிள்ளைபட்டி.